ரெபேக்காளை போல பலுகி பெருகனும், சீமாட்டியாக வாழனும்னு எல்லா பெண்களுக்கும் ஆசைதான். ஆனால் அதே ரெபேக்காளை போல ஊர் பேர் தெரியாத வழிப்போக்கருக்கும் அவர் ஒட்டகங்களுக்கும் சேர்த்து கிணற்றில் தண்ணீர் இரைக்க இன்று எத்தனை பேர் தயாராக இருப்பாங்க...,?!?? அவள் சோம்பி திரிபவள் அல்ல. குற்றம் குறை கூறி அலுத்துக் கொள்பவளும் அல்ல. ரெபேக்காள் தான் செய்யும் காரியங்களை மனதார செய்தாள். கர்த்தர் அவளை ஆசீர்வதித்தார். இன்றைக்கு நாமும் நமக்கு நேரிடும் காரியங்களை முழுமனதோடு செய்கிறோமா?
ஒத்து வந்த பலவற்றிக்காக, ஒத்து வராத ஒன்றை,இரட்டை,மூன்றை எப்படி மனதை ஏற்றுக்கொள்ள வைப்பது.???!!! சுடும் சொற்களை சோற்றுடன் சேர்ந்து விழுங்க நினைத்து, மீன் முள் போல் தொண்டையில் சிக்கி தினம் தினம் தொந்தரவு செய்கிறது. ஈரத்துனியால் அழித்து புதிதாக்கப்படும் கரும்பலகை போல மனமும் தினம் புதியதானால், கடந்த கால ரணங்களின் நெருக்கடியில் இருந்து கொஞ்சம் தப்பித்து கொள்ளலாம். எப்போதோ உணர்ந்த அன்பின் நெடியோடு வழங்கும் அன்பு வந்து சேரும் ஓர் நாள், என்ற நினைவோடு, கணத்த இதயத்துடன் காலத்தை கடத்தும் பல மாதறின் கல்யாண பந்த காதல் ஊசலாடுகிறது.