வீட்டு மருதானி முன்பை விட அவள் கைகளுக்கு நன்றாய் சிவக்கிறது. அவள் ஆசையாக செய்த வற்றல், வடகங்ககளை களவாட காகங்கள் அதிகமாக வருவதில்லை தற்போது. வீட்டின் அருகே தேசிய நெடுஞ்சாலை ஒன்று பெரும் பாலங்களுடன், சாலை அகலமாகிக்கொண்டிருந்தது. சிலுசிலுவென்று வீசிய காற்றின் திசைமாறி, சாலை வேலையின் புழுதியில் மொத்த ஊரும் நிறைந்திருந்தது. திருமணமாகி வருகையில் பச்சை பாய் விரித்து வரவேற்ற மரங்கள் தற்போது அங்கு இல்லை.
"Celebrating her strength, her stories, and her wisdom. A thoughtful corner of the internet curated entirely for women and everyone."

Comments
Post a Comment